இரா.பத்மநாபன்
கனடாவிலும் காலை உணவுத் திட்டம் அறிமுகம்!
Image Courtesy: CBC News, Canada
கனடா: தமிழகத்தில் மட்டுமில்லாமல் கனடாவிலும் காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றியாகும்’ என திமுக தெரிவித்துள்ளது.
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எக்ஸ் (X) சமூகவலைதளத்தில், “கனடா பள்ளி குழந்தைகளுக்கு 1 பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 5 ஆண்டுகளுக்கு ஆறாயிரத்து நூற்றி நாற்பது கோடிகள்) மதிப்பில் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப் போகிறோம்” என பதிவிட்டு இருந்தார்.
தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் தமிழகத்தில் மட்டுமில்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றியாகும் என முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“அறிவு” நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம், பகைவராலும் அழிக்க முடியாத உட்கோட்டை. அறிவு அற்றம் காக்கும் கருவி. பகைவரும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டை இந்த அறிவு ஆகும். அதனை ஆரியம் பிறப்பின் அடிப்படியில் தடுத்தபோது அதனை பொதுவாக்கி அந்த கல்வியை அனைவரும் பெரும் பொருட்டும் அதனை பெற தடுக்கும் அனைத்தையும் கொடுத்து கல்வியை வளர்த்தது திராவிடமே. பள்ளிகளில் உணவுத் திட்டத்தை முதன் முதலி துவங்கியது நீதிக்கட்சி எனப்படும் திராவிட இயக்கமே. இந்த உண்மை குறித்த வரலாற்று கட்டுரைக்கு http://மதிய-உணவுத்-திட்டம்-வரலா
